|
வணக்கம் நண்பர்களே,
புத்தகங்கள் படிப்பது என்பதே ஒரு இனிமையான அனுபவம். மேற்கத்திய அறிஞர் ஒருவரின் கூற்றுப்படி "கண்கள் தனது பிறவிப்பயனை அடைவதே புத்தகங்களை நாம் படிக்கும்போதுதான்" என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. கணத்துப் போன நெஞ்சம் புத்தங்களை படிக்கும்போது சற்றே தனது கணங்களை இழந்து முகம் புதுப் பொலிவு பெற உதவுகிறது.
நீங்கள் தொடர்ந்து படிப்பவர்களின் முகத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்.. அவர்களது கண்கள் ஒருவித வெளிச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர்களை சுற்றி சில சுகமான அதிர்வுகள் உண்டாகிக்கொண்டே இருக்கும். இந்த அதிர்வுகள் அவர்களை மட்டுமின்றி அவர்களை சுற்றி உள்ள அணைவரையும் மேன்மைப்படுத்திக்கொண்டே இருக்கும்.
படிப்பது என்பது ஒரு கலை. படிப்பது என்பது ஒரு தவம். படிப்பது ஒரு வித வரம். எல்லோரு இந்த வரத்தை பெற்று இன்புற்று வாழ வேண்டும்.
தமிழ் ஸ்டுடியோ.காமின் இந்தப் பகுதியில் எழுத்தாளர் திரு. தமிழ்மகன் அவர்கள் தான் படித்து ரசித்த புத்தங்களை பற்றியக் கருத்துகளை தொடர்ந்து உங்களிடையே பகிர்ந்துக் கொள்ள இருக்கிறார்.
இனி அவரைப் பற்றி சில வரிகள்:
 |
தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. |
சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
அடுத்த வெள்ளிக்கிழமை (12 - 06 - 2009) முதல் தொடர்ந்து உங்களை படித்து ரசிக்க வருகிறார். தமிழ்மகன்.
இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.
|