கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்..குறும்படம் தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. திரைத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தொடர்களாக இப்பகுதியில் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி  
     
 

அக்னிப்பார்வை

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.

வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com

தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

வணக்கம் வாசகர்களே!

எடிசன் சினிமாவை கண்டுபிடித்தபோதோ, லூமினியர் சகோதரர்கள் அதை பொது மக்களுக்கு திரையிட்டபோதோ அது, உலகில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்று பல கோடி புரளும் ஒரு துறையான சினிமா, பணத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், சமுதாய அக்கரையை தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளது.

சினிமா ஒரு பொழுது போக்கு வடிவத்திலிருந்து, ஒரு கலையாக, இலக்கியமாக, ஒரு பிரச்சார சாதனமாக, ஏன் அறிவியல் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும் இருந்திருக்கிறது. அத்தகைய சினிமவை பற்றி பேசும்பொழுது அதன் ஆரம்ப காலகட்டத்தில் அதற்கு, அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டு, சினிமா பேசாத போது அதைப் பற்றி பேச வைத்தவர்களில் குறிப்பிடதக்கவர் சார்ளி சாப்ளின்.

சாப்ளின் இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்க ஹாலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திரமாகி, உலக மக்களை தன் நகைச்சுவை திறனாலும், நடிப்பாலும் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தவர்.

தான் உருவாக்கிக்கொண்ட ‘The Tramp’ (வழிப்போக்கன், நாடோடி) என்னும் கதாப்பாத்திரத்தைக்கொண்டு நம்மை சிரிக்கவைத்தார், சிந்திக்கவைத்தார், அழவைத்தார், ஆர்பரிக்க வைத்தார். இவரின் படங்கள் அப்படி என்ன சொல்லுகின்றன?

சினிமாவின் முதல் ஜீனியஸ் என இவரை அழைக்க காரணம் என்ன? இரண்டாம் உலக போர் உச்சத்தில் இருந்த சமயம் ‘ஹிட்லரை’ கேலி செய்து இவர் எடுத்த ‘த கிரேட் டிக்டேடர்’ படத்தை ஹிட்லர் இரண்டு முறை பார்த்தார்.

இவரின் படங்கள் கம்யூனிசத்தை பரப்புகிறது என அமெரிக்க அரசாங்கம் இவரை அமெரிக்காவினுல் வர அனுமதிக்கவில்லை. இத்தனை நாள் என்னை வாழவைத்த மக்கள் என்னை வெறுக்கிறார்கள் என மனம் வருந்தினாலும், சாப்ளின் வழக்கமான தன் சினிமா வேலைகளை தொடர்ந்தார். அதுதானே அவர் திரையில் காட்டிய கதாபாத்திரத்தின் பழக்கம்.

அந்த ’வழிபோக்கன்’ கதாபாத்திரம் விழும் , உடனே எழுது தூசி தட்டிக்கொள்ளும். எவ்வளவு வீழ்ச்சிக்குபின்னும் நாளை வரப் போகும் நல்ல நாளுக்காக உலகை ரசிக்கும். கஷ்டங்கள், காதல் தோல்வி, அவமானம், அனைத்திற்க்கும் சிறிது நேரம் வருந்திவிட்டு, தன் அடுத்த வேலையை தொடரும்.

இது ஒரு விதத்தில் சாப்ளினின் மனோபாவம். தன் குழந்தை இறந்தது, சரியான மணவாழ்க்கை அமையவில்லை, தன் நாட்டு மக்கள் அவரை வெறுத்து நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, இதன், ஒரு பொருட்டும் அவர் கலங்கவில்லை தன்னுடைய வேலைகளை தொடர்ந்தபடியிருந்தார்.

இனி இந்தத் தொடரின் மூலம் நாம் சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி படிக்கப் போகிறோம். அவர் சொல்ல வந்தது என்ன? மக்கள் அவரை ஏன் ரசித்தனர்? சர்சைகள், அவர் ஏன் சினிமாவின் முதல் ஜீனியஸ் என அழைக்கப்படுகிறார்? அவர் படங்கள் கம்யூனிசத்தை சொல்லுகின்றனவா? அவரின் படங்களினூடே ஒவ்வொன்றாக சென்று பார்ப்போம்.

அடுத்த வாரம் (11-02-2009) முதல் சார்லி சாப்ளினையும் அவரது படைப்புகளையும் ஆழமாய் அறிவோம்.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS தொடர்கள் TS சார்லி சாப்ளின் TS அக்னிப்பார்வை தொடர்கள் வாயில்

முற்றும்

அக்னிப்பார்வை  

1972 ஆம் ஆண்டு சாப்ளினுக்கு இன்னொரு சிறப்பு ஆஸ்கர் விருது வழங்க ஆஸ்கர் குழு முடிவு செய்தது. முதல் சிறப்பு விருதை அவர் 1928 ம் ஆண்டு ’த சர்கஸ்” திரைப்படத்திற்காக வாங்கியிருந்தார். ஆனால், இந்த விருதுக்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது, தன்னை எந்த நட்டினுள் நுழைய வேண்டாம் என விரட்டி அடித்தனரோ அந்த நாட்டின் உயரிய விருது அவரை தேடி வந்ததுதான். உற்சாகமாக அமெரிக்கா கிளம்பினார். மக்களின் ஆரவார வரவேற்பில் அசந்து போனார். பண பற்றாக் குறையினால், அவருக்கு அமெரிக்காவில் செலவு செய்து தங்குவது சிரமமாக இருந்ததே தவிற அமெரிக்க மக்களின் வரவேற்பு அவர் மனதை குளிர்வித்திருந்தது.

தன்னுடைய இறுதி நாட்களை தன் குடும்பத்தாருடன் அமைதியாக கழித்தார். சாப்ளினுக்கு நான்கு மனைவிகள் என்றாலும் கடைசியாக அவரை பார்த்துகொண்டது அவரின் நான்கவது மனைவியான ’ஊனா ஒ நீல்’. சாப்ளின் தன் குழந்தைகளை மகிழ்விப்பதிலும் எந்த குறையும் வைக்கவில்லை. அவரது குழந்தைகள் யாரும் பெரிதாக சினிமா உலகில் சோபிக்கவில்லை.
மைக்கல் சாப்ளின் ‘எ கிங் இன் நியுயார்க்’ உடன் சேர்த்து சில படங்களுடன் நிறுத்திக்கொண்டார். சாப்ளின் நடிக்காமல் இயக்கிய இரண்டு படங்கள் ‘எ வுமன் இன் பேரிஸ்”, “எ கவுண்டஸ் ஃபிரம் ஹாங்காங்’. முதல் படத்தில் அவர் இயக்கியது எட்னா என்றால் தன் கடைசி படத்தில் அவர் இயக்கியது மர்லன் பிராண்டோவை. இந்த இரண்டு படங்களுமே விமர்சகர்களால் பாராட்டபட்டாலும், பெரும் வெற்றி பெறவில்லை. அதனால் சாப்ளின் திரைவுலகத்தை விட்டு மெல்ல விலகினார்.

1977ம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சாப்ளின் இதயம் நின்றது. தன் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த சாப்ளின் அமைதியான உறக்கத்தில் தன் உடலை பிரிந்தார்.

சாப்ளின் இறந்த பின்பும் சர்ச்சைகள் தொடர்ந்தன. புதைக்கபட்ட அவரது உடலை சிலர் திருடி வைத்துக்கொண்டு பணம் கேட்டனர். நல்ல வேளை உடல் கைப்பற்றப்பட்டு மீண்டும் புதைக்கபட்டது. இறந்தும் அவரது மதிப்பு குறையவில்லை.

இன்றளவும் சாப்ளின் நகைச்சுவையின் பிராண்டாக பார்க்கபடுகிறார்.ஆண்டுகள் கடந்து இந்த தலை முறை குழந்தைகளும் அவர் படங்களை பார்த்து சிரிக்கின்றனர். சினிமா உலகில் அவர் புகுத்திய புதுமைகள், கதைகள், கருத்துகள், கலகங்களும் இன்றளவும் மற்ற சினிமா கற்கும் மாணவனுக்கு பாலபடம். சினிமா இயக்குனருக்கு வேத வாக்கு.

சாப்ளின் படங்களை பார்க்காமல் ஒருவர் நல்ல படத்தை எடுத்தார் என்றால் என்னளவில் அவர் கின்னஸ் சாதனைக்கு தகுதியானவர். சாப்ளினை உலகின் பல தலை சிறந்த இயக்குனர்களும் கொண்டாடினார்கள். அவருக்கு ரசிகரகளாயிருந்தனர். அவர் படங்களிலிருந்து பாடம் படித்தனர்.

அவரை வெறுத்தாலும், அவர் படத்தில் ஒரு காட்சியை பார்த்து ரசிக்கமுடியாமல் இருக்க முடியாது. சிரிக்க முடியாமல் நிச்சய்ம் இருக்கவே முடியாது. இன்றளவும் உலக பட விழக்களில் சாப்ளினின் ஏதாவது ஒரு படம் திரையிடப்படுகிறது. எல்லா திரைத்துறை மாணவர்களுக்கும் பாடமாக வைக்கபட்டிருக்கிறது.

சாப்ளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு வந்த படம் ரிச்சர் அட்டன்பரெஹோ இயக்கிய “சாப்ளின்” அதில் சாப்ளினாக நடித்தவர் ஆஸ்திரேலிய நடிகரான ராபர் டவுனி ஜூனியர். தன் பங்கை சிறப்பாகவே செய்திருந்தார்.

சாப்ளினை போன்று அவரை மிமிக்ரி செய்யும் பல கலைஞர்கள் உலக அளவில் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர். அப்படி பார்த்தால் சாப்ளின் இன்றளவும் உயிருடன் இருக்கிறார்.

தமிழ் படத்தை பொருத்தவரை சாப்ளின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் அவரின் பெரும்பாலான படங்களும், காட்சிகளும் தமிழ் படத்தில் இடம் பெற்றுள்ளன. சாப்ளினை போன்று தமிழ் படத்தில் நிறைய பேர் நடித்திருந்தாலும், மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் கமலஹாசன். புன்னகை மன்னன் எனும் திரைப்படத்தில் அவர் ’சாப்ளின்’ செல்லப்பாவாக நடித்திருப்பார். நேரம் கிடைத்தால் பாருங்கள் அதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சாப்ளின் போன்ற உடை, நடை செய்துவிடலாம். கொஞ்சம் கவனித்தால் அவரை போன்று முகத்தில் உணர்ச்சிகளை காட்டுவதில் தான் கமல் நடிப்பின் நுட்பத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு கருத்தை சொல்ல அழுது வடிந்து கொண்டிருக்காமல், மக்களை சிரிக்க வைத்து அதே கருத்தை அவர் மனதில் பதியவைக்க வேண்டும். இதை சாப்ளின் தொடங்கி வைக்க, அவர் வழியை வெற்றிகரமாக கடைபிடித்த நடிகர்களில் முக்கியமான இந்திய நடிகர் கலைவானர் என்.எஸ்.கே.

அதேபோல் ஹிட்லர் நடத்திய யூத கொடுமைகளை பற்றி சோகமாகவும், அழுது வடிந்துக்கொண்டிருக்கும் படங்களின் நடுவே, சிரிப்பை முதன்மையாக வைத்து அதே சோகத்தை மக்கள் மனங்களில் உணர செய்த ‘லைப் இஸ் பியுட்டிபுல்’ படத்தின் இயக்குனரும் நடிகருமான பெனினி ஆதாரமாக கொண்டது சாப்ளின் திரைப்படத்தை தான். என்ன படம் என்று எல்லாருக்குமே தெரிந்திருக்கும்.

இந்த தொடரை எழுத ஆரம்பித்து இப்பொழுது முடிக்கும் போது நான் உணர்ந்த விஷயம், சாப்ளினின் படங்களை பார்ப்பது போல் அவர் படங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் கூட சுவாரசியம் மிகுந்த ஒன்றுதான்.

முற்றும்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.