|
அன்புள்ளம் கொண்ட நண்பர்களே
திருக்குறளுக்கு வெண்பாப்பாங்கில் கவிதை விளக்கம் கொடுக்கும் எனது முயற்சி
கனிந்துள்ளது. முப்பாலும் மூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
நூல்களின் விலை ரூ 135 அன்புத்தொகை கழித்து ரூ.100 க்கு தரப்படுகிறது.
கேட்பது எனது கடமை! வாங்குவது உங்கள் உரிமை!
விருப்பத்தைத் தெரிவித்தால் முகவரியை அனுப்புங்கள். கூரியரில் அனுப்புகின்றேன்.
கூரியர் செலவு தனி. நூல் கிடைத்தபின் காசோலை அனுப்பலாம்.
முகவரி:
MADURAI BABARAJ
1,FIRST CROSS STREET
GANESHNAGAR TELEPHONE COLONY
ADAMBAKKAM
CHENNAI- 600 088
MOBILE:900 3260 981
நன்றி.
என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இராமன் கூறிய தத்துவம்
நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற
மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று; அரோ
இறப்பினும் , திருஎலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.(1964)
வெண்பா:
போர்க்கள வீரமோ வீரமல்ல ! வாழ்விலே
தாழ்வுநிலை வந்தபோதும் செல்வங்கள் சென்றபோதும்
வாழ்வில் அறவழியில் துன்பத்தைச் சந்திப்போர்
வீரராவார் இவ்வுலகில் தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலக்குவன் சுமந்திரனிடம் கூறியவை:
"உரைசெய்து எம்கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு
விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்றுஅறையற் பாலதோ?"(1977)
வெண்பா:
உனக்குத்தான் இவ்வரசு என்றுசொல்லி விட்டு
மனைவிக்கு வாக்குறுதி தந்து இராமன்
வனமேகச் செய்த தசரதனை மன்னன்
எனக்கூறல் நன்றோ? உரை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கானகம் பற்றி நற்புதல்வன் காய்உணப்
போனகம் பற்றிய பொய்இல் மன்னற்கு, இங்கு
ஊன்அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு" என்றான். (1978)
வெண்பா:
காட்டில் கிடைக்கும் உணவுகளை ராமனோ
கூட்டிவைத்தே உண்ண , அறுசுவை உண்டியை
நாட்டில் ருசித்து மகிழும் அரசனிடம்
காட்டின் துயரத்தைச் சொல்.
என்றே மனக்கொதிப்பை லெட்சுமணன் சீறியே
சிந்தினான் கோப அனல்மழையை அங்கேதான்!
தன்னுடைய ஏமாற்ற எண்ணத்தை இவ்வாறு
தன்கருத்தாய்க் கூறினான் சாற்று.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து பருகுவோம்...
|