வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி -  25 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

நெடுந்தூர பயணத்தில் செல்லப்பா காரை விட்டு இறங்கிய போது களைப்புற்று இருந்தான். அவன் தேடி வந்த முகவரி முதல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளதாக அறியப்பட்டான். அதற்குள் அவனை பின் தொடர்ந்து வந்த போலீஸ் அதிகாரி this is your place என்று கூறி விடை பெற்றான். அவனை அழைத்து வந்த கார் ஒட்டுனர் அவன் அருகில் வந்து sorry for the trouble, 28 dollars என்று தன் காரின் மீட்டரை கை நீட்டி காண்பித்தான். அதை அறிந்த செல்லப்பா 30 dollars கொடுக்க அதை பெற்றுக்கொண்டே அவன் 2 dollar-யை திருப்பி கொடுத்துவிட்டு see u some time என்று அடுத்த சவாரியை எதிர் நோக்கி சென்று மறைந்தான்.

அவனை பற்றி செல்லப்பா நினைத்த போது நம்ம ஊரில் நன்றாக இருந்தும் பணப் போதையால் எண்ணங்களை ஊனமாக்கி பெண்களை மயக்கி அல்லது மடக்கி மதுவால் விலைமாதுவாகியும் குழந்தைகளை கடத்தி அழகான குழந்தைகளை அழுக்காக்கி கை கால்களை முறுக்கி திருத்தி முடமாக்கி துறுத்திக் கொண்டு சாலையில் வாகனம் மஞ்சல் வெளிச்சம் மறைந்து சிகப்பு வெளிச்சம் வெளிப்படுவதற்குள் கடந்து விட வேண்டும் என்ற தருவாயில் சைக்கிளில் செல்பவர்களில் இருந்து பலவித கார்கலிலும் வரும் அனைத்து வாகனங்களும் நீ நான் என்று முனைப்பாக செல்ல முயன்ற வாகனங்கள் நடுவில் ஜாம், ஜாம் என்று வந்த சவ ஊர்வலத்தை பார்த்து ட்ராபிக் போலீஸ் சிகப்பு வெளிச்சத்தை முடக்கிவிட அனைத்து வாகனங்களும் பட்டியில் அடைத்த செம்மரி ஆடுகளைப்போல் தவித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இது தான் சமயம் என்று பொணமாகிப்போன விலங்கினத்தை கொத்திக் கொண்டு இருக்கும் கழுகுகள் போல் முடமாக்கப்பட்டவர்கள் பச்சை வெளிச்சம் வருவதற்குள் நாலு காசு பார்த்துவிட வேண்டும் என்று சாலையில் நின்ற கார்களை தனது கைகளால் கொத்தி கொத்தி பிச்சை எடுப்பதாக கூறி மனித சமுதாயத்தின் எச்சங்களாக அலையும் அவர்களையும் நினைத்து இந்தியாவின் சோம்பலுக்கு அதுவும் ஒரு காரணம் என்றான்.

அமெரிக்காவின் வல்லமைக்கு இந்த கார் ஒட்டுனரும் ஒரு நன்மதிப்பு என்று எண்ணி அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறக்காததை கண்டு மீண்டும் ஒரு முறை அழுத்தினான். அரை நிர்வாணமாக கலைத்துவிட்டானே தூக்கத்தை என்ற ஏக்கத்தில் கதவை திறந்தான் சலீம். ஹாய் செல்லா என்று ஹாலில் கிடந்த சோபாவில் ஒரு ஒரத்தில் சுருங்கிக் கொண்டே “ போய் ரூமுக்குள்ள படுத்துக்க காலையில பேசிக்குவோம் என்று சொல்லிக்கொண்டே அவன் சோபாவில் ஒரத்தில் சுருங்கிப் போனான். அசதியில் படுத்த செல்லப்பாவுக்கு அவனின் துர்நாற்றம் அவனைப் பாடாய்படுத்தியது அதை கழுவி துரத்த குளியல் அறைக்குச் சென்றான் ஆடைகளை கலைத்து பிறந்த மேனியாய் பிரவேசித்தான் குளியல் அறையில், குறுகிப்போன நீர்விழ்ச்சியில்(சவர்) குளித்துக் கொண்டே புளோரிடா போயி நாஸ்ட்ராம் மாதிரி பெரிய விஞ்ஞானியா ஆகிடனும். ஏதாவது புதுசா கண்டுபிடிச்சு அதுக்கு நம்ம பேர வைக்கணும். எப்படியோ அமெரிக்கா வந்தாச்சு இனிமே நாம ராஜா தான். இனிமே நம்ம ஊருல துபாய்க்கு போயிட்டு வந்தா துபாய்க்காரன், சிங்கபூர் போயிட்டு வந்தா சிங்கபூரான் என்பது போல நம்ல மட்டும் டேய் அமெரிக்கென்யா இல்ல இல்ல...டேய் வெள்ளக்கார துரை போறாரு என்பாங்கெ இங்க இருந்து ஊருக்கு போரப்போ ஊருல பாதிய வாங்கிடனும். பதினெட்டு பட்டி இல்ல,,,,? தஞ்சை மாவட்டத்துல உள்ள அத்தனை பேரும் நீ நான்னு பொண்ணு குடுக்க அலையுணும் .கொஞ்சம் பேராசைதான் பரவாயில்ல பெருசா ஆசைபட்டாதானே சிறுசாவது கெடைக்கும், அப்புறம் நடிகை குல்பிகுஷ்தாரா கூட ஒரு நாளாவது. அவங்கதான் கிரேட் ஸ்டார் கிதார்கென் கூட இருக்காங்கன்னு சொல்றாங்களே.

இப்ப நடிகைகள் எல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைக்குதானே குறிவைக்கிறாங்க.. அத சாக்கா வைச்சு பணத்தை தூக்கி அவளுக்கு. கத்தை, கத்தையா எறிஞ்....சா....பணத்துக்கு பொணமும் வாயை பொளக்கும்னு. சொல்வாங்கெலே அதுபோல பொளப்பா.. பணத்துக்கு அவ, அந்த கேப்ல கெடா வெட்னா அப்ப நமக்கு கொலக் குத்துதான். மனிதனோட அழிவு ஆசையிலதான் ஆரம்பிக்குது. அடங்கு மவனே அடங்கு என்றான். மனிதனுக்குள் உள்ள மகா பாதகர்களின் ஒருவன்அவனுக்குள்ளே. பிறகு தனக்குத்தானே ஆசைபடு! அழியும் ஒன்றின் மீது அல்ல? அழியாப் புகழ்மீ....து, திருவள்ளுவன் இறந்தும் அவன் படைத்த திருக்குறல் நாம் படிக்கும் ஒவ்வொரு முறையும் பிறந்து கொண்டு இருக்கிறதே அதன் மீது! அல்லது தினம்தோரும் புதுமை படைத்துக் கொண்டு இருக்கும் எதன் மீதாவது. பிறகு இதுவரையில் அம்மா அப்பாவுக்கு ஒன்னுமே பண்ணல அவுங்கள மெட்ராஸ்க்கு கூப்பிட்டு வந்து ஒரு நல்ல வீட்டுல தங்க வைச்சு அவங்ககூட மச்சக்காளையும் சேர்த்துபாத்துக்கணும்னு, சோப்பும் நுரையுமாக குளித்துக் கொண்டு இருக்கும்போது குளியல் அறையின் கதவு டம்....டம்....டம்... என்று தட்டப்படுகிறது. செல்லப்பா ஒரு நிமிஷம் என்று முகத்தை கழுவிக்கொண்டு டவலை இடுப்பில் உடுத்திக் கொண்டு கதவை திறக்க போலீஸ்சும் அவனுக்கு பின்னால் சலீமும் நின்று கொண்டு இருக்க.....

தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.