வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி -  22 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மா ஆட்சியும் பல மாதங்களில் முடிந்து  ஜெயலலிதா அவர்கள் விஸ்வரூபம் எடுத்து அவர்களையும் வீழ்த்தி அதிக காலம் ஆண்ட வரலாற்று பெருமை சேர்க்க வந்துவிட்டது கலைஞர் ஆட்சி.

டாக்டர், கலெக்டர், ஆடிட்டர், வக்கீல், இன்ஸ்பெக்டர் என்று தன் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் கணாக்களை உடைத்து பொறியாளர், ஊரில் ஒரு பொறியாளர் என்பது அறிதான காலம் போய் ஊருக்கு நூரூ பேராகி மாதம் ஐயாயிரம் சம்பாதிப்பது பெரிதாக இருந்த வேளையில் 50 ஆயிரத்தில் இருந்து, 3 லட்சம் எனவும், வெளிநாட்டுக்கு நாம் வேலை தேடும் காலம்போய் வெளிநாட்டினர் நம்ம ஊருக்கு வேலைக்குவந்து கொண்டும் அத்துடன் நாகரீகம் என்ற போர்வையில் கலாச்சார சீர்கேடுகளால் கன்னிகா தாணம் நடக்கும் முன்புவரை கன்னித்தன்மை இழக்காத தமிழ்நாட்டில், கரு கலைப்பை ஒருசில ஆரம்பபள்ளிகளில் படிப்புடன் சேர்ந்து ஒருசில கேளிக்கை விடுதிகளில் கார் சாவியை மாற்றும் தோரனையில் கனவன் மனைவியை மாற்றிக்கொண்டு இருக்கும் வேலையில் இனிவரும் காலக்கூட்டு குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக படுத்திருந்த ஒருபொழுது மட்டுமே என்ற வரலாறு பதிக்க போகும் காலத்தில் செல்லப்பாவும் இன்ஜீனியர் முடித்து படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வீயுவில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக நடத்தும் கம்பெனியில் வேலையில் சேர்ந்து முதல் முறையாக முதல்வகுப்பு-இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக சென்னையைவிட்டு நியூயார்க் செல்லும் விமானத்தில் அவன் சென்னையை கடந்து சென்று கொண்டு இருக்கும்போது வீட்டின் முற்றத்தில் இட்ட கோலத்தை கோழி களைத்தது போல் தெரியும் இரவு நேர சென்னையை ரசித்துக்கொண்டே போகிற வேளையில் எஸ்கியூஸ்மீ என்று பணிப்பெண் அழைக்க, அவன் அவளை திரும்பி பார்த்த போது அவன் முன் பழரச பாணங்களுடன் மதுவயையும் சேர்த்து ஏந்திக்கொண்டு ரெடிமேட் கடை விரிப்புபோல் நகைத்து கொண்டு அவனை பார்த்தாள்.

எதை எடுக்கலாம் என்று அவன் எண்ணம் அலை பாய்ந்தபோது பணிப்பெண் எனிதிங் யுவர் சாய்ஸ் என்றால் அவன் ஒயின் கிளாசை மட்டும் எடுத்த போது கைதவறி மாதுவின் ஆடையில் சிதறியது மது. அவன், சாரி... சொல்லி முடிப்பதற்குள் its ok one minit, என்று கூறி கனநேரத்தில் ஆடை மாற்றி அதே ரெடிமேட் சிரிப்புடன் ஒயின் கிளாசை அவனுக்கு தந்தாள். அதை பெற்றுக்கொண்ட அவண் பெண்கள் தன் வாழ்நாட்களில் குறைந்த காலத்தை ஆடை மாற்றுவதிலே போக்கும் காலம் போய் ஜெட் வேகத்தில் ஆடை மாற்றி வந்து நின்றாளே என்று நினைவு ததும்பிய போது தான் நண்பன் ஜோசப் கூறியது நினைவுக்கு வர அமெரிக்காவில் ஒரு துணி வாஷிங்க்கு செய்யும் செலவில் ஒரு துணி விலைக்கே வாங்கிவிடலாம் என்று கூறியதால் பழைய பேண்ட் சட்டையுடன் ஒரு சில அழுக்கு துணியையும் அவனையும் சேர்த்து சுமக்கும் அந்த விமானத்தில் வைரமுத்துவின் பார்க்கடல் புத்தகத்தை புரட்டினான்.

அதில்: “நீ நின்ற இடத்திலேயே நிலைக்க வேண்டுமானால் ஒடிக்கொண்டே இரு” என்பதை பலமுறை படித்துவிட்டு வேறொரு பக்கத்தை புரட்டியபோது அங்கனம் அவன் அம்மா ஞாபகம் வந்தது.  அம்மாவிடம் இருந்து மடல் வந்து நாலு நாளாச்சே படிக்கவே இல்லையே என்று தன் மணிப்பர்சில் மடித்தும் சுருக்கியும் வண்ணம்  குறைந்து எண்ணமும் கலைந்த வயோதி கலந்த அந்த தாயிடமிருந்து எதிர்பார்பின்றி வந்த தபாலை மடல் கையில் கிடைத்தும் படிக்க நேரமின்மையால் புதைத்துவைத்துருந்த அந்த பொக்கிஷத்தை பிரித்தான்.

அதில் அன்புள்ள மகனுக்கு...
கோயிலுக்குள் உள்ளவர் பெயர் கொண்டவரோட மனைவியுமான உன் அம்மா எழுதிக்கொண்டது. இங்கு நான், உன் அய்யா, மற்றும், இந்தகடுதாசியை நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டு இருக்கும், அய்யாவு மக, அனைவரும் நலம். மற்றும் அங்கு உன் நலம் அறிய அவா? அப்புறம் புதுசா வாங்கிட்டு வந்த வெள்ளப் பசுமாடு கன்னுக்குட்டி போட்டு இருக்கு. அய்யாவு பொண்ணு வயசுக்கு வந்துட்டா, வேலாயி கெளவி செத்துப்போச்சு. ஆத்துல தண்ணிவரல, சோளக்கதிரு அடிச்சி காஞ்சுக்கிட்டு இருக்கு. நடேசன் பொண்டாட்டி வேலைக்காரன்கூட ஒடுனவ திரும்பிவரவே இல்லை. இங்கே அவ்வளவுதான் அங்க நீ எப்படி இருக்கே. நீ அமெரிக்கா போரியாமே ஊரெல்லாம் ஒன்ன பத்திதான் பேச்சு. நா ஒரு எலவு எனக்கு எதுவுமே புரியல, எனக்கு அமெரிக்காவெல்லாம் தெரியா.....து. பேரிக்கா.....தான் தெரியும்னு சொன்னே எல்லாரும் கொல்லுன்னு சிரிக்கிராலுவ. எது எப்படியோப்ப நீ வேலாவேளைக்கு சாப்பிடு. சனிக்கிழமை சனிக்கிழமை எண்ண  தேச்சு குளி.... உடம்ப பாத்துக்க நல்லா தூங்கு. பீடி சிகரெட் குடிக்குறவன் கூட சேராதே.
இப்படிக்கு
உன் அம்மா...

என்று படித்து முடித்து போது அவன் கையில் இருந்த ஒயின் கிளாஸ் காலியாகி போதை மயக்கத்தில் பாற்கடலை புரட்டிய போது உறங்கிப்போனான். விமானம் அமெரிக்காவில் புகுந்து நியூயார்க்கை நெருங்கி கொண்டு இருக்கிறது......

தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.