வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி -  21 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

பனிபூண்டார் கடந்தவை அனைத்தும் உரைத்து, களைத்துக்கொண்டுடிந்தபோத, மின் விசிறி ஒடிக்கொண்டு இருந்தும் அவர்மீது மழைத்துளிப்போல் வேர்வைத்துளிகள், அவர் உடலில் சொட்டு சொட்டாக வெளியேறிக்கொண்டே இருந்தன. உண்மைகளை அவர் வாய்மொழியாக பெற்றுக்கொண்ட பின் அவருக்கும் காவலாளிகளுக்கும் இடையில் இரும்பு கம்பிகளால் ஆன சுவர்கள் இருந்தன. காவல்நிலையம் மொத்தமும் மயான அமைதியில். மின் விசிறி மட்டும் கரக், கரக் என்று ஒலித்துக்கொண்டு இருந்தது.

அவ்வேலையில் இன்ஸ்பெக்டர், “நீங்க அவுங்கள ஒன்னும் பண்ணாம இங்க வந்து சொல்லி இருந்தீங்கன்னா அவுங்க உள்ளயும் நீங்க வெளியேயும் நிம்மதியா இருந்து இருக்கலாம்”. என்றார். “என்ன சார் பண்றது அவுங்கள பாத்தவுடனே என்ன நடந்துச்சுன்னு எனக்கே தெரியலையே சார்”. இன்ஸ்பெக்டர்: “பெரும்பாலும் எல்லா தவறுகளுமே இப்படித்தான் நடக்குது”. அவ்வேளையில் ஒரு காவலாளி குறுக்கிட்டு “அவெங்கள உயிரோட நாம புடிச்சு இருந்தாமட்டும் என்ன பண்ணி இருக்க முடியும். அவெங்க வந்த ஒருவாரத்துல வெளிய போயிருப்பாங்க. அந்த திருட்டுப்பய ஊர்லே இருந்து எவென் அவெங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வந்து இருப்பாங்கெ... இன்ஸ்பெக்டர், பெரும்பாலும் நகரங்கள விட கிராமங்கள்லதான், அதிகமா செய்யுற தப்புல இருந்து தப்பிவிடுறாங்க. பனிபூண்டார்... எம்புள்ளயும் போயிட்டான்சார். நானும் உள்ள வந்து எம் சம்சாரமும் நடுத்தெருவுல நிக்க போராளே சார். ஒரு ஈ, எறும்புக்கு கூட தப்பு எலக்காத என்ன கொலைகாரனா ஆக்கிட்டாங்களே சார் என்று அவர் அழ...இன்ஸ்பெக்டர் அவரைப்பார்த்து “அழாதேங்க நாம மட்டும் நல்லவனா இருந்தா பத்தாது நம்மள சுத்தி இருக்கிறவங்களும் நல்லவங்களா இருக்கனும். நீ திருந்துனா நாடு திருந்தும்னு சொல்றதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை கெடையாதுங்க... நாம நேர்மையா இருந்தா அடுத்தவனுக்கு பொறாமையா இருக்கு. நாம கஷ்டப்பட்டு உழைச்சா அடுத்தவனுக்கு அது நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுக்கிறதா உணர்றாங்க.

ஏன் ஒம் மகன கொலை பண்ணினாங்கெ. பனிபூண்டார் குறுக்கிட்டு “நான் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச ஆறு ஏக்கர் நெலத்துக்காக. “அதா....ன் அவெங்க உழைக்க தயாரா இல்ல, அவெங்க மட்டும் இல்ல இப்ப நெறைய பேர் அப்படிதான் இருக்காங்க அதுக்கு தகுந்தாப்புல.. அவன் அவனுக்கு தேவையான எல்லாம் பிரியா கொடுக்குறாங்களே,,,,,! பின்ன எப்படி இதெல்லாம் நடக்காம இருக்கும்”. பனிபூண்டார், எம் சம்சாரத்த நெனச்சா...தா...ன், சார் என்று அழுது கொண்டே இருக்கிறார். இன்ஸ்பெக்டர் “ நீங்க சட்டத்துக்கு கட்டுப்பட்டுதான் போவனும். ஒங்க மனைவிய பற்றிய கவலைய விடுங்க. நல்ல முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்டு நான் பாத்துக்கிறேன். பனிபூண்டாரோ “ அதுபோதும்சாமி நீங்கதான் ஏ,,,,ஞ்சாமி என்று, இன்ஸ்பெக்டர் நின்ற திசையை பார்த்து தரையை தொட்டு கும்பிட, காவலாளிகள் அனைவரும் அவர் அவர் நாற்காலிகளில் அமர்கின்றனர்.

கிராமமே இருள் சூழ்ந்து சாமுக்கோழி கூவுர வேலையில் சாமிஅய்யாவும், சாரதாவும் காமப்போராட்டத்தால் கூடல் கழிந்து அவள் மீது படுத்திருந்த அவனை “எழுந்துறிங்க பொணமா கனக்கிறீங்க... என்று அவனை தள்ள அவனும் அவளைவிட்டு விலகி படுத்துக் கொண்டே......... ”இதுல இருக்கிற சந்தோசம் வேரயெதுல இருக்கு சொல்.....லு, நீயும் நானும் எலியும் பூனையுமா அப்ப அப்ப கடிச்சுக்கிட்டாலும், உன்னபிரிஞ்சு நா இருந்தது இல்ல. என்ன பிரிஞ்சு நீ இருந்தது இல்ல. ஒலச்சு கலச்சநானும், ஒடா தேஞ்சநீயும், இந்தமாரி நேரத்துலதான் நிம்மதியா இருக்க முடியுது, ஆமாம் இப்ப முடிஞ்ச ஒடனே அப்படிதான் சொல்லுவீங்க காலையில எல்லும் கொல்லுமா இருப்பீங்க. சாயந்தரம் அல்வாவும் கையுமா வருவீங்க. சாமிஅய்யா: நீ மட்டும் என்னா பாலையும் படுக்கையும் ரெடி பண்ணாமயா இருக்கே. சாரதா: எனக்கு ஒரு ஆசைங்க... சொல்லு.... இப்படியே செத்து போயிடனுங்க”, ஏண்டி என்ன கமுனாட்டியா விட்டுட்டா......டா?. இல்லெங்க ரெண்டுபேரும் சேர்ந்துதான். அது நம்ம கையில இல்லயேடி . ஏண்டி நான் ஒன்னரொம்ப கஷ்டப்படுத்துறேனா? அது இல்லங்க இந்த நிமிஷத்துல இருக்குற சந்தோஷம் வேற எந்த சமயத்துலயும் இல்லேங்க...அதற்கு சாமியையா.. ஒரு வேல அந்தமாரி நடந்தா எனக்கு சந்தோஷம்தான் என்ன பண்றது. எல்லாம் விதிப்படிதானே நடக்குது.

சாரதா: பாவம் ஊருக்கே ராசாவா இருந்த நல்ல மனுஷன் மணியகாரரு கடைசியில நாயவிட கேவலமா செத்தாரு. ஒருலிட்டர் பால்ல பத்துலிட்டர் தண்ணிய ஊத்துன தனுக்கொடி செத்தபிறகும், அவென் பொண்டாட்டிக்குகூட அவந்தாண்னு தெரியாம தண்ணியில பால காமிச்சு டீ ஆத்திக்கிட்டு இருந்தா... கடைசியில போலீசு வந்து பொணத்த அடையாளம் காமிச்சாங்க. எப்ப பாத்தாலும் காசு காசுன்னு அலஞ்ச ஆரானும் கடைசி வரையும் காலணா காசு கொடுத்து ஒரு கால் சட்டை கூட வாங்கிபோடாம ஒசி கோமனத்தோடவே போய் சேர்ந்துட்டான். வெளிய தெரியாம கட்டுகோப்பா வாழ்ந்த பனிபூண்டார் ஜெயில்லயும் அவர் பொண்டாட்டி ஒரு நிம்சம் கூட ஒயாம வீட்டுக்குள்ளயும் ஒப்பாரி வைச்சுக்கிட்டு இருக்காங்க இந்த ஊருல நாம எப்படிங்க சொச்சகாலத்த கடத்த போறோம்.

சாமிஅய்யா: அதனாலெ தானேடி இந்த ஊரு கண்ணுபடாத எடத்துல நம்ம புள்ளய படிக்க அனுப்பிச்சு இருக்கோம். சாரதா.... “எப்படியோ அவன் காலமாவது நல்லா இருந்தா சரி, ம்.....ம்.....ம்.. கொஞ்சம் தள்ளி படுங்க வேர்வை நாத்தம் தாங்கல ஒங்கமேல. என்று அவள் அவனை விட்டு விலகிபடுத்து அவள் கண்களை மூட இருண்ட வானத்தில் புள்ளியாக வெள்ளி முளைத்த வேலையில் கீழ்வாணம் சிவந்து வெளிச்சம் படரும்போது கண்விழித்த குயில்கூவ.......

தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.