வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யாவரும் கேளிர்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி - 20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1 பகுதி - 24
1
1 பகுதி - 25
1
1 பகுதி - 26
1
1 பகுதி - 27
1
1 பகுதி - 28
1
1 பகுதி - 29
1
1 பகுதி - 30
1
1 பகுதி - 31
1
1 பகுதி - 32
1
1 பகுதி - 33
1
1 பகுதி - 34
1
1 பகுதி - 35
1
1 பகுதி - 36
1
1 பகுதி - 37
1 பகுதி - 38
1 பகுதி - 39
1 பகுதி - 40
1  
 
  யாவரும் கேளிர்
   
 

யாவரும் கேளிர் - பகுதி -  11 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

மழைக்காலம் என்பதால் வெயில் குறைவு.சாமிஅய்யா கொண்டுவந்த ஒரு வண்டி ஆத்துமணலை வறுத்துக்கொண்டுக் இருக்கிறாள் சாரதா. மஞ்சளும், காஞ்சமிளகாயும், கல் உப்பும் சேர்த்து கருங்கல் அம்மியில் அரைத்து வெண்கல காப்புக்கட்டிய மரக்காப்படியில் வைத்து இருக்கிறாள்.

செல்லப்பாவை குளிப்பாட்டி கோவணம் உடுத்தி வீட்டின் முன்வாசலில் வறுத்து கொட்டி இருக்கும் மணல் நடுவில் செல்லப்பாவை நிறுத்திய சாமிஅய்யா ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் செல்லப்பா பயத்துடன் சுடுமணலில் நிற்க சாமிஅய்யா பச்சை மூங்கிலை கத்திபோல் சீவி தன் கையில் ஒரு முறை கிழித்துப்பார்க்கிறான். அவன் கைதோல் கிழிக்கப்பட்டு ரத்தம் எட்டிப்பார்க்க அதை உறுதி செய்தவுடன், சாமிஅய்யா செல்லப்பாவின் கைகளை இறுக்ககட்டி அவனை அசையாமல் நிற்கவைக்க அவனும் வறுத்த மணல் சூடு பொறுக்கமுடியாமல் நிற்க்கும் வேளையில் சாமிஅய்யா அந்த மணல் சூடு ஆறுமுன் முடித்துவிடவெண்டும் என்று ஊர்மக்கள் கூர்ந்து கவனிக்கும் வேளையில் சாரதா செல்லப்பாவின் வாயில் ரஸ்தாளி வாழைப்பழத்தை திணித்துவிட்டாள், கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. செல்லப்பாவின் அழுகை சத்தம் மைக் வைத்து மக்களை ஏமாற்ற தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கும், அளவுக்கு அதிகமாக பொய்வாக்குறுதிகளை கக்கும் வேட்பாளர்கள் போல், செல்லப்பா கத்திக்கொண்டு இருக்கும் வேளையில் அவன் கைகளின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு அவனின் உடல் முழுவதும் அந்த மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு ரத்தம், நூரூ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி நின்றால் வேர்வை உடம்பில் மழைத்துளி போல் சொட்டுமே, அதேபோல் செல்லப்பாவின் உடம்பெல்லாம் ரத்தம் சொட்டுகிறது, அவ்வேளையில் வாயில் தினித்த வாழைப்பழத்தையும் மீறி அவன் வலி பொறுக்கமுடியாமல் அல்றிக்கொண்டு இருக்கும் போதே அவனை சுடும் மணலில் போட்டு புரட்டுகிறான் சாமிஅய்யா.

கிழிந்த பகுதிக்குள் சுடும் மணல் பட்டவுடன் மேலும் செல்லப்பா துடிக்க அதைப்பொருட்படுத்தாமல் அவனை மணலில் இருந்து தூக்கி நிறுத்தி “ ஏய் அரைச்சுவச்ச மஞ்சளை எடுத்துட்டு வாடி” என்று கூற, அவள் “இதோ” என்று மரைக்காப்படியில் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வைத்திருந்த மஞ்சளை சாரதா, செல்லப்பாவிடம் கொடுக்க அதை வாங்கி ஏற்கனவே மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு அவனை சுடும் மணலில் வறுத்து எடுத்து அவன் நின்ற போது அவன் உடம்பு நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பித்த சிட்டுகுருவிபோல் துடித்துக்கொண்டு இருக்கும்போதே சாமிஅய்யா கூடி இருந்த கூட்டத்தைப்பார்த்து “ ஏலேய் இரண்டுபேர் வாங்கடா” என்றான்.

கூட்டத்தில் இருந்து இருவர் ஒடி வந்து செல்லப்பாவின் கைகளையும், கால்களையும் இறுக்கி பிடித்துக்கொள்ள சாமிஅய்யா செல்லப்பாவின் உடம்பு முழுவதும் தன் கையில் வைத்திருந்த அரைத்த மஞ்சளை தடவ, மஞ்சலும், காய்ந்த மிளகாயும், உப்பும் அவன் உடம்பில் உள்ள புண்ணில் பட்டவுடன் கரும்பு தோட்டத்தில் தீப்பற்றி எரிவது போல் அவன் உடம்பில் வலிபாடாய்படுத்தியதில் செல்லப்பாவின் வாயில் இருந்த வாழைப்பழம் வெளியே வந்துவிழ, அவன் அலறும் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அனைவரும் கூடிக்கொண்டிருக்கும் வேளையில் ஸ்டீபன் வாத்தியாரும் அங்கே வந்துவிட்டார். அவரிடம் கொளந்தசாமி “வாத்தியாரே நீங்களாவது சொல்லக்கூடாதா? ஏன் சாமிஅய்யா இந்தப்பாடுபடுத்துறான், அந்த பச்சபுள்ளைய? “ அதைக்கேட்ட வாத்தியார் கொளந்தசாமியிடம் அவர் நல்லதுதான் பண்ணிக்கிட்டு இருக்கார். நாமதான் நாகரீகமா மாறணும்ன்னு நெனச்சு நல்ல விஷயங்களை எல்லாம் தொறத்திக்கிட்டு இருக்கோம் இந்த மாதிரி விஷயம் உங்களுக்கு புதுசா இருக்கும், ஆனா ?...

நரிக்குறவர் இனத்தில் இன்றும் ஒர் வழக்கம் உண்டு. நிறைமாத கர்ப்பிணியை யார் துணையுமின்றி காட்டில் அவளுக்கென்று அமைக்கப்பட்ட குடிசைக்கு அனுப்பிவிடுவார்கள், அவளே தனக்கு தேவையான பணிகளை செய்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டும், சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், தனது பிரசவவலியை அடக்கி மனதைரியத்துடன் தானே பிரசவித்ததும் தனது குழந்தையுடன் சென்று தனது கூட்டத்தினருடன் வந்தினைந்து மகிழும் அவளின் மனோ பலத்தை என்னவென்று சொல்வது. பிரசவசக்காலத்தில் தாயும் குழந்தையும் இறந்தாலும் அவளின் உறவினர்கள் இறந்தபின்புதான் சென்று பார்ப்பார்கள்.

ஆப்பிரிக்க காட்டுல வசிக்கிற பழங்குடியினர் இன்றும் தங்களுக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் குழந்தையை மரப்பானையில் ஐஸ்சை நிறைய நிறப்பி அதனுள் குழந்தையை தலைகீழாக பிடித்து தலையை மட்டும் ஐஸ் தண்ணீருக்குள் மூழ்கடிக்க சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுப்பார்கள். அதிலிருந்து பிழைத்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ச்க்தி அதிகமாம். அந்த மாதிரி செய்யும் போது சில குழந்தைகள் இறப்பதும் உண்டாம்.

அந்த கால போர் வீரர்கள் இந்த வைத்தியத்திற்கு உட்பட்டவர்கள் என்று வரலாறு சொல்கிறது. தமிழ் இனத்துக்காக மட்டுமல்ல நம்தமிழ் மொழிக்காகவும் தான் அந்த போராட்டம் என்பது நமக்கு தற்போது அறிவது கடினம். நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது தூயதமிழ். அதாவது யாழ்ப்பாணம் வழியாக கனடாவுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் சென்று கொண்டு இருக்கிறது. (இதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விளாவரியாக பேசுவோம்).

புல், பூண்டுகள் கூட அழிந்துபோனால் மீண்டும் முளைத்துவிடுகிறபோது, ஒர் இனமா, அதுவும் நம் ஈழத்தமிழினமா அழிந்துவிடப்போகிறது? வெட்ட, வெட்ட முளைப்பவர்கள் வீரர்கள் அல்லவா! போரும், காதலும் தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள். போர் இலக்கணங்களை அறியாதவன் தமிழனல்ல என்று புறநானூறு சொல்கிறது. தமிழினத்தை காக்க போரிடுவது குற்றமா? ஈழத்தமிழினத்தை காக்க போரிடும் தமிழினத்தலைவன் தனது இளமை பருவத்தில் மஞ்சள்பத்து வைத்தியத்திற்கு உற்பட்டவர்தான் என்று சொல்ல கேள்வி. இதைப்பற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம்.....

“களம் கழுமிய படைஇரிய
உளம் கிழித்தவேல் பறித்தோச்சின்னு “ என
தமிழின வீரத்தை புறநானூறு சொல்கிறது.


பத்துவயதுக்கு மேலான ஆண்பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் இதுபோல் செய்வது வழக்கமாம். “ஆமாம் கொளந்தசாமி ஏன் இந்த மாதிரி சாமிஅய்யா செல்லப்பாவுக்கு செய்கிறார்ன்னு தெரியுமா? “ தெரியாது வாத்தியாரே. “அதாவது இதுமாதிரி செய்த பிறகு உடல் உறுதியாகும், உடம்புல கத்தியால குத்துனாக்கூட கத்தி உடையுமாம். அதையும் மீறி காயப்பட்டா உடனே ஆறி அந்த காயப்பட்ட இடத்தில சுவடே அறியாதாம். எந்த பூச்சிகடிச்சாலும் விஷம் ஏறாது.”அப்படியா சார் “ நான் என்ன கதையா சொல்றேன்” என்றார் வாத்தியார். இருவரும் சிரிக்க, செல்லப்பாவை வேப்ப இலையையும் அதில் கொஞ்சம் புளிய இலையையும் கலந்து நாலு கையளவு ஆலம்பட்டையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளம் சூடாகிய பிறகு அந்த தண்ணீரை ஊற்றி சாரதா செல்லப்பாவை குளிப்பாட்ட அவனுக்கும் இதமாக இருக்கிறது. அவனுக்கு உடல் மட்டுமல்ல மனதும் உறுதியாகிறது. குளிப்பாட்டியபின் செல்லப்பாவின் தலையை தன்சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டு இருக்கும் போது செல்லப்பாவிடம் சாரதா இதுயெல்லாம் ஒன் உடம்புக்கு நல்லது நீ பட்டனத்துலா படிக்கும் போது கண்டகண்ட தண்ணீயில குளிச்சு கண்டத தின்னாலும் எந்த வியாதியும் வராது... சரியாப்பா...

சரிம்மா... என்றான் செல்லப்பா.

தொடரும்...

(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)

ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com

அடுத்து...




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.