தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 18 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)
நாள்: சனிக்கிழமை (13-03-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு
இந்த மாதம் முதல் புதிய பகுதியாக குறும்பட கலந்தாய்வு பகுதி நடைபெறும். தொடர்ந்து பதினேழு மாதங்களாக குறும்பட வட்டத்தில் அனைத்து விதமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும் நடந்து முடிந்துவிட்டன. எனவே தாங்கள் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து குறும்பட வட்ட உறுப்பினர்களுக்கும் உண்டு. இந்த மாதம் முதல் கட்டாயமாக அனைத்து உறுப்பினர்களும் குறும்படம் எடுத்து அவற்றை குறும்பட வட்டத்தில் திரையிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார். தமிழ் இலக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு சிறுகதையை குறும்படமாக எடுத்து அதனை தமிழ் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். உறுப்பினர் எடுத்த குறும்படத்தை "குறும்பட வட்டத்தின்" முதல் பகுதியில் திரையிட்டு அதில் அவர் திருத்திக்கொள்ள வேண்டிய குறைகள் ஆராயப்படும். இந்த முயற்சி பரிச்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தரமான குறும்படங்கள் தமிழ்நாட்டில் பரவலாக வெளிவர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
குறும்படம் எடுக்க தேவைப்படும் அனைத்து உதவிகளும் தமிழ் ஸ்டுடியோ மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். கேமெரா, படத்தொகுப்பு உட்பட.
இந்த உதவிகளைப் பெற நினைப்பவர் நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராக சேர்ந்து மூன்று மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இது தமிழ் ஸ்டுடியோவின் "படமெடுக்கலாம் வாங்க" என்கிற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த மாதம் இலக்கியப் பகுதி குறும்பட வட்டத்தில் இடம்பெறாது. விரைவில் "இலக்கிய சோலை" என்கிற பெயரில் தனியொரு மாதந்திர நிகழ்வாக நடைபெறும்.
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்டக் கலை இயக்குனர், திரு. முத்துராஜ் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் தேவைப்படும் அழகியல் தொடர்பாகவும், குறைந்த செலவில் குறும்படங்களுக்கான அரங்குகள் அமைப்பது தொடர்பாகவும் வழிகாட்ட உள்ளார்.
முத்துராஜ் அவர்கள் விரைவில் வெளிவர இருக்கும் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
| குறும்படத்தின் பெயர் |
இயக்குனர் பெயர் |
கால அளவு |
| |
|
|
| செவ்லி |
அறிவழகன் |
20 நிமிடங்கள் |
| திற |
பிரின்ஸ் பெரியார் |
12 நிமிடங்கள் |
| கர்ணமோட்சம் |
முரளி மனோகர் |
15 நிமிடங்கள் |
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. மீரா கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
மீரா கதிரவன் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த "அவள் பெயர் தமிழரசி" என்கிற திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இவர் புகழ்பெற்ற மலையாள இயக்குனர் லோகிதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர்.
இந்த மாதம் உலகக் குறும்பட வரிசையில் திரையிடப்படும் குறும்படம்
உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்
லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0425200/plotsummary
(இத்திரைப்படம் பௌர்ணமி இரவில் நேரமின்மையால் திரையிடப்படவில்லை. எனவே இந்த மாதக் குறும்பட வட்டத்தில் திரையிடப்படுகிறது)
மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
|