இன்னல்கள் இனிமை தரும்
என்பது
உண்மை தான் காதலியே
உன் நினைவுகள்
எனக்காக இசைக்கின்றன!
உரியநேரம் வந்து விட்டது
மலர்ந்த கருத்தை
நிறுத்துவது அசாத்தியம்
நான் இன்னமும்
உன்னையே காதலிக்கிறேன்!
உன்னைப் படித்த
அறிவின் ஆழமில்லை என்னிடம்
பட்டறிவின் தூரத்தில் நீ
எந்தன் நிழலருகில் உந்தன் நிழல்!
கள்ளிச்செடியில் மல்லிகைவாசம்
தேடிவந்த பனித்துளியொன்று
என்னை ஆறுதல் செய்து
மறைந்து விட்டது!
- என் சுரேஷ், சென்னை
|