வெகு துரத்தில் என்னை பார்த்த உலகம்
தன்னையும் அறிமுக படுத்தியது
என்னையும் அறிமுகப்படுத்த சொன்னது - என்
தியாகம் கண்டு கைதட்டியது
நியாயத்தோடு நான் கொண்ட உறவு
சிறிதாயினும் மெய்சிலிர்த்து நின்றது
சுயம் கருதியும் சூழ்நிலை கருதியும்
தாண்டிய வரைமுறைகளுக்காக விமர்சித்து கண்டித்து
"உன் தனித்துவமே உன்னிடம் சிறந்தது" - என்று
குரல் உயர்த்தி சொன்னது
கால சுழற்சியில் நான்
உலகத்தோடு கொண்ட உறவு நெருங்கி விட்டநிலையில்
என் நியாயங்கள் கொண்டு முகம் சுளிர்த்து
தியாகங்கள் கொண்டு பொறுமை இழந்து
தாண்டப்பட்ட வரைமுறைகளுக்கு மட்டும் நியாயம் கற்பித்து
கடைசியாய் என்னை பார்த்து கேட்கிறது
"உனக்கு ஊரோடு ஒத்து வாழவே தெரியாதா?"
இது தான் உலகத்தின் - தூரப்பார்வயோ!!!
-எழுத்தொலி - சென்னை
|