அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தையும் அறிவியல் வேட்கையையும் வெளிப்படுத்தும் வகையிலான அறிவியல் புனைகதைகள் நவீன இலக்கியத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. அந்த வகையில் உலகத் தரம் வாய்ந்த பல அறிவியல் புனைகதைகளை மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழில் எழுதியிருக்கிறார். அவரது தாக்கத்தில் இன்று பலரும் தொடர்ந்து அறிவியல் புனைகதைகளை எழுதிவருகிறார்கள்.
பரிசுகள்:
முதல் பரிசு: ரூபாய் 20,000
இரண்டாம் பரிசு: ரூபாய் 1000
மூன்றாம் பரிசு: ரூபாய் 5,000
றுதிநாள்: ஜனவரி 15, 2009
தமிழில் அறிவியல் புனைகதை இலக்கியத்தின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் ஆண்டு நினைவையொட்டி, அவரது நினைவைப் போற்றும் விதமாக நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் நடத்தி, தமிழில் அறிவியல் புனைகதை மரபை தொடர்ந்து வளர்த்தெடுக்க எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரின் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் சென்னையிலிருந்து இயங்கும் ஆழி பதிப்பகமும் இணைந்து முடிவு செய்துள்ளன.
உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம். இந்த போட்டியில் தேர்வு செய்யும் கதைகளுக்கு சுஜாதா குடும்பத்தினர் சார்பில், அமரர் சுஜாதா டிரஸ்ட் சார்பில், 2009ம் ஆண்டின் சிறந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசாக ரூ.20,000 ரொக்கமும் இரண்டாம் பரிசாக ரூ.10,000 ரொக்கமும் அளிக்கப்படும். சிறப்புப் பரிசுகளாக ரூ.5000 இந்தியா, இலங்கை, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக், பிற நாடுகள் என தலா ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒன்று என அளிக்கப்படும்.
இவற்றுடன் அனுப்பப்படும் கதைகளில் இருந்து சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆழி பதிப்பகத்தின் மூலமாக ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடப்பட உள்ளன.
அமரர் சுஜாதாவின் புதல்வரும் சுஜாதா அறக்கட்டளையைச் சார்ந்தவருமான திரு. கேசவா ரங்கராஜன் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், “படைப்புத்திறன் மிக்க இளம் தமிழ் எழுத்தாளர்களை இனம்கண்டு அடையாளப்படுத்துவதில் அப்பாவுக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. அப்படிப்பட்டவர்களின் திறமையை வளர்த்துவிடுவதற்கான வாய்ப்புகளை அவர் உருவாக்கித் தருவார். அவர்களின் திறமை எண்ணற்ற வாசகர்களை சென்றடைவதற்கு வசதியாக வெளிவருவதற்கான உதவிகளை அப்பா செய்வார்.” என்று சொன்னார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “இந்தப் போட்டியும் அதையேதான் செய்கிறது. அவரது தலைசிறந்த பணியை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கைப் பிறக்கிறது. நீங்கள் உங்கள் கற்பனைத்திறனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சியில் எங்களோடு இணைந்து நில்லுங்கள் என்றும் வரவேற்கிறேன்” என்றார்.
“அறிவியல் தமிழ் எழுத்துகள், அறிவியல் புனைகதைகள் மூலம் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு புது யுகத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர் அமரர் சுஜாதா. அவரது நினைவாக அவரது குடும்பத்தினருடன் இணைந்து ஒரு அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துவதற்கும் அவற்றை நூலாகத் தொகுத்து வெளியிடுவதற்கும் எங்களுக்கு அமைந்திருக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். இளம் தமிழ் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இதில் கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்" என்று ஆழி பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு. செ. ச. செந்தில்நாதன் கூறினார்.
இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான சந்திரன். "எழுத்தாளர் சுஜாதவுடன் 6 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவன், அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு பெற்ற சிலரில் ஒருவன் என்ற வகையில் - தமிழில் அறிவியல் புனைக்கதைகள் என்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா கொண்டிருந்த கருத்தும், கற்பனையுமே ஒரு அறிவியல் புதினம் என்பது என் கருத்து. ஏற்கனவே இது போன்ற அறிவியல் புனை கதை போட்டிகள் தொடர்பான கருத்தாடல்களின் போது நான் அவருடன் விவாதித்திருக்கிறேன்.” என்று கூறினார்.
தமிழ்கூறு நல்லுலகத்தின் பிணைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த அமரர் சுஜாதாவினி நினைவாக நடத்தப்படும் இந்த போட்டி அவரை நினைவுகூர்வதற்கான சரியானதொரு வழிமுறையாகவும் என்று எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பதிப்பகமும் கருதுகிறது.
மேலதிக விவரங்களுக்கு
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலைபேசி: 1-44-4358 7585
செல்பேசி: 91-99401 47473
மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
வலையகம்: www.aazhipublishers.com/sujatha.html
விதிமுறைகள்
1. போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் முற்றிலும் புதிதாக எழுதப் பட்டவையாகவும், இதுவரை அச்சிலோ, இணையத்திலோ வேறு வடிவங்களிலோ வெளியாகாதவையாகவும் இருக்கவேண்டும். மொழிபெயர்ப்புகள், தழுவல்களுக்கு அனுமதி இல்லை.
2. இந்தப் போட்டிக்கு சிறுகதைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு இதில் இடமில்லை. ஒரு கதை அதிகபட்சமாக 3000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. கதைகள் வழக்கமான அறிவியல் புனைகதை மரபைத் தழுவியதாகவோ, அதன் அடிப்படையிலிருந்து உருவானதாகவோ இருக்கவேண்டும். வெறும் புனைகதைகள் அறிவியல் புனைகதைகளாகக் கருதப்படமாட்டா.
4. கதைகள் வந்து சேருவதற்கான இறுதிநாள்: ஜனவரி 15, 2009
5. மின்னஞ்சல் வழி அனுப்புவோர் தங்கள் கதைகளை யூனிக்கோடு, டாம், டாப், டிஸ்கி எழுத்துருக்களில், RFT மற்றும்/அல்லது PDF வடிவங்களில் அனுப்பவேண்டும். பிற எழுத்துருக்களில் இருந்தால் எழுத்துருவையும் இணைத்து அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: sujatha.scifi@gmail.com
6. ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் பரிசு ஒரு நபருக்கு ஒன்று என்ற அடிப்படையிலேயே அளிக்கப்படும்.
7. போட்டியில் வெற்றிபெறும் கதைகள் மற்றும் வெளியீட்டுக்கென தகுதிபெறும் கதைகளை ஆழி பதிப்பகம் ஒரு புத்தகத் தொகுப்பாக வெளியிடுவதற்கான அனுமதி இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலமாக நீங்கள் அளிக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்.
8. பரிசுக்கான கதை தேர்வு விஷயத்தில் நடுவர் குழு மற்றும் ஏற்பாட்டாளர்கள் சேர்ந்து எடுக்கும் இறுதி தீர்ப்பே முடிவானது.
9. போட்டி குறித்து எந்தவித தகவல் தொடர்புக்கும் நடுவர் தீர்ப்பு வரும்வரை பதில் அளிக்கப்படமாட்டாது.
10. போட்டி முடிவு விருது வழங்கும் நாளுக்கு ஒருவாரம் முன்பு அறிவிக்கப்படும். பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரிலோ, அவர்கள் சார்பாக ஒருவரையோ அனுப்பி விருதையும், பரிசுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.
11. பரிசுகளும் தேர்ந்தெடுத்த கதைகள் கொண்ட நூலும் வெளியிடப்படும் நாள் – பிப்ரவரி 28, 2009.
12. போட்டி முடிவுகள் வெளியிடப்படும் நாள் பிப்ரவரி 15, 2009
|