வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
அழிந்துப் போன அடையாளங்கள்
1
 
1 முன்னுரை
1
1 வில்லுப்பாட்டு
1
1 கணியான் கூத்து
1
1 கரகாட்டம்
1
1 குறவன் குறத்தி
1
1 தெருக்கூத்து
1
1 பொம்மலாட்டம்
1
1 தப்பாட்டம்
1
1 ஒயிலாட்டம்
1
1 கோலாட்டம்
1
1 பக்கிரிஷாப்பாட்டு
1
1 எக்காளக் கூத்து
1
1 கழைக்கூத்து
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
 
  அழிந்துப் போன அடையாளங்கள்
  தொடர்கள் முதல் பக்கம்
 

11. பக்கிரிஷாப்பாட்டு - புதிய பாரதி: 05-07-09: 11:30 PM

இஸ்லாமிய மக்கள் வசிக்கிற தெருக்களில் அவ்வப்போது ஜல், ஜல் இசையுடன் கட்டுக்குலையாத கம்பீரக்குரலில் பாடல்கள் ஒலிக்குமே, கேட்டதுண்டா? அது தான் பக்கிரிஷாப்பாட்டு. பக்கிரிஷாக்கள் இஸ்லாமிய சமூகத்தில் பெருமைக்குறியவர்கள். இறையருள் பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

பக்கிரிஷாக்கள் பச்சை நிறத்துணியால் பெரிய அளவிலான தலைப்பாகையை கட்டியிருப்பார்கள். கழுத்தில் பெரிய மணிகள் கோர்த்த குருமந்தங்காய் மாலைகளை அணிந்திருப்பார்கள். வீடுகளில் பாடல் பாடி தட்சணை பெறுவதற்காக தோளில் ஜோல்னாப் பை ஒன்றும் மாட்டியிருப்பார்கள். எக்காரணம் கொண்டும் பக்கிரிஷாக்கள் காலில் செருப்பு அணிவதில்லை.

குரானில் மிகுந்த புலமை பெற்றவர்களாக பக்கிரிஷாக்கள் இருப்பார்கள். அல்லாவின் புகழையும், நபிகளின் பெருமையும், நபிகள் நாயகத்தினுடைய நண்பர்கள் வரலாற்றையும் கதைகளாக்கி, அரபு மொழிக் கலப்போடு பாடி, பாடலுக்கு தகுந்தவாறு டேப் போன்ற ஒரு இசைக்கருவியை இசைத்தவாறு வீடு, வீடாகச் சென்று தானியம் அல்லது பணம் பெற்றுச் செல்வார்கள். டேப் போன்ற அந்த இசைக்கருவியை "தாயிரா" என்று குறிப்பிடுகிறார்கள். இரவுகளை பள்ளிவாசல், தர்ஹாக்களில் தங்கி கழிக்கிறார்கள்.

மேற்கண்ட வரலாற்றுக் கதைகள் தவிர குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது பாடல்களையும் இவர்கள் பாடுவது வழக்கம். எக்காரணம் கொண்டும் இவர்களாக காணிக்கைகளை கேட்பதில்லை. இவர்களின் பாடல் ஒலி கேட்டதும் இஸ்லாமியப் பெண்கள் காணிக்கைகளை வாரி வழங்குவார்கள். வீடு நாடி வரும் பக்கிரிஷாக்களை வெறும் கையோடு அனுப்பமாட்டார்கள் இஸ்லாமிய மக்கள்.

இஸ்லாமியர்கள் குறைவாக வாழும் ஊர்களில் தனியாகச் சென்று கலை நிகழ்த்தும் பக்கிரிஷாக்கள், பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களில் 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று ஊருக்கு நடுவிலான ஓர் இடத்தில் கலை நிகழ்த்துவதுண்டு. இக்காலங்களில் இந்நிலை சிறுத்துவிட்டது. இவ்விதம் குழுவாக இவர்கள் நிகழ்த்தும் கலையாடல் மிகவும் ரசனைக்குறியதாக இருக்கும். இரவு 10 மணியளவில் தொடங்கும் இந்நிகழ்ச்சி 1 மணி நேரத்தில் நிறைவடைந்து விடும். ஊர்ப்பொதுவில் பக்கிரிஷாக்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

குழு நிகழ்வில், நால்வர் வட்டமாக அமர்ந்து கொள்வார்கள். தலைமைப்பாடகர் நடுவில் இருப்பார். அவர் தாயிராவை இசைத்தபடி நெடும் கதைப்பாடல் ஒன்றைப் பாட, பிற பக்கிரிஷாக்கள் பின்பாட்டு பாடுவர். தலைமை பக்கிரிஷா பாடலுக்கு இடையே வசனநடையில் விளக்கமும் சொல்வார். இடையிடேயே பெரும்பான்மையான அரபு வார்த்தைகளும், "யா.. அல்லாஹ்" என்ற வார்த்தையும் இசையோடு கலந்து ஒலிக்கும். இக்குழுவில் ஒரு பக்கிரிஷா, நிகழ்ச்சி தொய்வடையும் சூழலில், ஏதேனும் விளக்கங்கள் கேட்டு தலைமைப் பக்கிரிஷாவை உற்சாகப்படுத்துவார்.

இக்குழு நிகழ்வில், நூர்மசாலா கதை, அய்யபு நபி வரலாறு, யூசுபு நபி வரலாறு, இசுவத்து நாச்சியார் வரலாறு, கிளிக்கூட்டு அம்மா வரலாறு ஆகிய அரபுக்கதைகளையும் இசைப்பாடலாக்கி வழங்குவதுண்டு. இக்கலை தமிழ் மொழியில் நிகழ்ந்தாலும், அரபு, உருது, பாரசீக மொழிகள் சார்ந்த ஏராளமான சொற்கள் இடம் பெறுவதால் இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்களுக்கு இக்கலை இருண்மை தரும்.

இக்கலைக்கு திட்டமிட்ட இலக்கணங்கள் உண்டு. சபைக்கு ஸலாம் சொல்வதில் தொடங்கி, பங்கேற்பாளர்களை வரவேற்றல், பார்வையாளர்களை வரவேற்றல், இன்றைய இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைச் சூழல் பற்றிய விமர்சனங்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கூறல் என திட்டமிட்டு நிகழ்த்தப்படும்.
பக்கிரிஷாக்கள் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பக்கீர்களின் தலைவரை உஸ்தாத் என்று அழைக்கிறார்கள். பக்கீராக மாறுவதற்கு தனிச்சடங்குகளே இருக்கின்றன. தர்க்காக்களில் நடத்தப்படும் அந்த சடங்கின் பெயர் முரீஅத். இந்த சடங்கை உஸ்தாத் நடத்தி வைப்பார்.

பக்கிரிஷா ஆக விரும்புபவர், தம் உடம்பில் உள்ள ரோமங்களை களைந்துவிட்டு உஸ்தாத் முன் அமர்வார். ஒரு கம்பியில் பாலைத் தொட்டு, அவரின் முதுகில் "ஹலம்" என்று உச்சரிப்பேற்கும் அரபு எழுத்தை உஸ்தாத் எழுதுவார். அதன் பிறகு பாலும், பழமும் கலந்த உணவு அவருக்கு வழங்கப்படும். இதையடுத்து, பால், வெல்லம், எழுமிச்சை சாறு கலந்த பாணத்தை உஸ்தாத் அவருக்கு ஊட்டி விடுவார். இந்த சடங்குக்குப் பிறகு 40 நாட்கள் பக்கிர்ஷா யார் கண்ணிலும் படாதவாறு தனித்து வாழ வேண்டும். இதற்கிடையே இறந்தவருக்கு செய்யப்படுவது போல பக்கீரானவருக்கும் மூன்றாம் நாள் சடங்கும், பின் 40ம் நாள் சடங்கும் இஸ்லாமிய சமூக வழக்கப்படி செய்யப்படும். இவ்விதம் இறந்தாராகக் கருதப்படும் இஸ்லாமியப் பாணர் பின், இறைவனின் அருள் பெற்றவராகவும், அருகாமையில் வாழ்பவராகவும் கருதப்பட்டு, அவரின் தேவைகளை இஸ்லாமிய மக்களே நிறைவு செய்து காப்பாற்றுவார்கள்.

பல பகுதிகளில் இக்கலை நலிந்து விட்டாலும், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் ஓரு சில பகுதிகளில் உயிர்ப்போடு இருக்கிறது.

அடுத்த வாரம் எக்காளக்கூத்து

அழிந்து போனவற்றை அல்லது அழிந்துக் கொண்டு இருப்பவற்றை மீட்டெடுக்க வாருங்கள்...

வாருங்கள் மீட்போம்....

திரு. புதிய பாரதியை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள:  ilamurasu@gmail.com


அடுத்து...
 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.