வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
அழிந்துப் போன அடையாளங்கள்
1
 
1 முன்னுரை
1
1 வில்லுப்பாட்டு
1
1 கணியான் கூத்து
1
1 கரகாட்டம்
1
1 குறவன் குறத்தி
1
1 தெருக்கூத்து
1
1 பொம்மலாட்டம்
1
1 தப்பாட்டம்
1
1 ஒயிலாட்டம்
1
1 கோலாட்டம்
1
1 பக்கிரிஷாப்பாட்டு
1
1 எக்காளக் கூத்து
1
1 கழைக்கூத்து
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
 
  அழிந்துப் போன அடையாளங்கள்
  தொடர்கள் முதல் பக்கம்
 

10. கோலாட்டம் - புதிய பாரதி: 17-06-09: 11:30 PM

தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கோலாட்டக் கலை நிகழ்த்தப்படுகிறது. பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளை கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப தட்டிக்கொண்டே ஆடுவது கோலாட்டம். கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்பு பெறுகிறது. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையின் பழமையை விளக்க புராணச் செய்தியன்று.

தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் லட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்த போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் கலையவில்லை.

பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்ததாக சொல்லும் ஒரு புராணக்கதை கோலாட்டத்தின் மேன்மையை விளக்குகிறது.

காணிக்காரர்கள் என்னும் ஆதியினம் கோலாட்டத்தை தங்கள் இனக்கலையாக கொண்டது. திருநெல்வேலியை ஒட்டிய பாபநாசம் மலைப்பகுதி, கன்னியாகுமரியை ஒட்டிய அருமனை உட்பகுதிகளில் வசிக்கும் காணிக்காரர்கள், வனத்துறை தரும் தொல்லையால் தங்கள் அடையாளங்களை இழந்து இப்போது நாகரீக சமூகத்தோடு பட்டும் படாமலும் கலந்து வாழ்கிறார்கள். பாபநாசம் மலையின் கரடுமுடரான பாதையை தாண்டிய உச்சிப்பகுதியில் கொஞ்சம் பேர் இன்னும் பழைய கலாச்சாரத்தை கைவிடாமல் வசிக்கிறார்கள். குச்சிக்கிழங்கு எனப்படுகிற மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்து, முற்றிலும் அது சார்ந்த உணவுப்பழக்கத்தையே கொண்டு வாழ்கிறார்கள்.

கேரளத்தை ஒட்டிய பகுதிகளில் வசிப்பதால், கேரள வாழ்வியில் கூறுகளே இவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கிறது. ஓணம் பண்டிகை, குலதெய்வங்களின் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளில் கோலாட்டம் நிகழ்த்துவார்கள்.

காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணி. ஓணம் பண்டிகை அன்று இவரது தலைமையில் ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். தொடக்கத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள்.

ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகை கலையாடல்கள் உண்டு. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன. காணிக்காரர்கள் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளை கழியாக பயன்படுத்துவார்கள். இக்கழிகள் பளபளப்பாகவும், அடித்து ஆடும்போது கணீரென ஒலி எழுப்புவதாகவும் இருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே இக்கழி தரும் மரங்கள் வளர்கின்றன. இப்போது வனத்துறை நிர்ப்பந்தத்தால் காட்டுப்பகுதியை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் கையில் கிடைக்கும் எந்த குச்சியையும் பயன்படுத்துகிறார்கள் காணிக்காரர்கள்.

கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்த கலையாடல் நிகழும்.  கோலாட்டத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.

காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், தங்கள் குல தெய்வங்களை பாடுபொருளாக வைத்து இசையுடன் ஆடுவர். பிற சமூகத்தினர் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்களை பாடுபொருளாக கொள்வார்கள். தொடக்கத்தில் உடுக்கக்கட்டை என்ற இசைக்கருவியை மட்டுமே கோலாட்டத்துக்கு பயன்படுத்தினர். பானை அல்லது மண்சட்டியில் உடுப்பின் தோலைக் கட்டி இந்த இசைக்கருவி செய்யப்படுகிறது. உடுக்கும் பயன்படுத்துவதுண்டு. தற்காலத்தில் செண்டை மேளம் பெருவாரியாக பயன்படுகிறது. நாஞ்சில் நாடு உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய தமிழ்ப்பகுதிகளில் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், திருமணமானவர்கள் வளமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சமயச்சடங்காக கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் மரபு சாராத கோலாட்டம் நிகழ்கிறது. கன்னியாகுமரியில் இயங்கும் களரி அமைப்பும், திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி கலைக்குழுவும் இக்கலையை விடாது இயக்குகின்றன.

தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.

அடுத்த வாரம், பக்கிரிஷாப் பாட்டு

அழிந்து போனவற்றை அல்லது அழிந்துக் கொண்டு இருப்பவற்றை மீட்டெடுக்க வாருங்கள்...

வாருங்கள் மீட்போம்....

திரு. புதிய பாரதியை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள:  ilamurasu@gmail.com


அடுத்து...
 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.